`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய,

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளையும் வழங்குகிறார். முதல்வர் விஜய்என் வாழ்வில் அதிகம் காயப்படுத்தியது கரூர் சம்பவம்! இந்நிலையில் கரூர் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், "என் வாழ்வில் என்னை அதிகம் காயப்படுத்தியது கரூர் சம்பவம். மக்களை சந்திக்க வேண்டும் என்பதின் அடிப்படையில்தான் பிரசாரத்தை முன்னெடுத்தோம். அரியலூரில் கூட்டம் முடித்து பெரம்பலூர் புறப்படும்போது காவல்துறை கூட்டம் அதிகமாகிவிட்டது எனச் சொன்னார்கள். அதனால் திரும்பிவிட்டோம். மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம். வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?அதேப்போல நாமக்கல் மீட்டிங் முடிந்து கரூர் செல்லும்போது கரூர் காவல்துறை எங்களை எச்சரித்திருக்கலாமே... காவல்துறை நினைத்திருந்தால் அந்த மீட்டிங்கையும் கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் போலீஸே எங்களை அழைத்துச் சென்ற நாடகமெல்லாம் ஏற்கவே முடியாது.முதல்வர் விஜய்காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்ததா?என்னை ஏளனமான பேசினார்கள். ஓடி ஓழிந்து விட்டேன் என்று என்னை பேசினர். வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? காயங்கள் , வழியை கொடுத்துவிட்டு அரசியல் செய்கிறார்கள். மக்களுக்காக மட்டுமே வந்தவன் இந்த விஜய். கரூர் கூட்டத்துக்கு ஏன் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்ததா?. கரூர் போலீஸின் அன்றைய நாடகத்தை நம்பி ஏமாந்தேன். கரூர் சம்பவத்தின் பின்னணி மூளை யார்?என் மனதை விட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. ``சதியை, சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் ஒரு நினைவுச் சின்னம்' - விஜய் | Live பணமா - ஜனமா என்று என்னிடம் கேட்டால்!மக்களுகாக எல்லாத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். நமக்கு காயங்கள் கொடுத்தவருக்கு 2026 சட்டமன்றத்தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் இது பத்தாது. அவர்கள் காலங்காலதுக்கும் எழுந்திருக்கவே முடியாதளவு அடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். என்னை மக்களைவிட்டு விலக்கலாம் என்ற எண்ணமா? இப்போதுமட்டுமல்ல எப்போதும் பணமா - ஜனமா எனக் கேட்டால் எப்போதும் ஜனம்தான் எனக்கு முக்கியம். இதை கெத்தாக சொல்வேன். இதுபோல ஓபனாக அவர்களால் பேச முடியுமா? ஆனால் குறைகள் மட்டும் நம் அரசின் மீது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் பார்ட்டி பண்ட் என இரண்டு கட்சிகளும் மாறி மாறி எடுத்திருக்கிறார்கள்.முதல்வர் விஜய்நான் ரீல் தாய்மான் அல்ல ரியல் தாய்மாமன்!சட்டமன்றத்தில் பார்ட்டி பண்ட் எனச் சொன்னதும் ஓடிவிட்டார்கள். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். சென்னையில் பாலம் கட்டும் டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முகமுடியாக கிழிகிறது. அதனால் காதிலிருந்து ரத்தம் வராத குறையாக திரும்பும் திசையெல்லாம் கதறல். மின்சாரத் துறையில் பதவி உயர்வை நாங்கள்தான் போட்டோம். லஞ்சம், ஊழல் ஒழிக்க முடியாது என்றவர்களே இப்போது ஒரு பைசா கூட ஊழல் இல்ல... வேலை சரியாக வேகமாக நடக்கிறது என ஒரு பெரியவர் கூறினார். இதெல்லாம் மனது இருந்தால் செய்திருக்கிலாம். எல்.என்.டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குறுவை சாகுபடிக்காக சிறப்பு தொகுப்பு அறிவித்திருக்கிறோம். அவர்களுடன் அரசு கூடவே நிற்கும். பெண்கள் பாதுகாப்பு சிங்கப் பெண் திட்டம். அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டம் அறிவிக்கப்படும். நான் ரீல் தாய்மான் அல்ல ரியல் தாய்மாமன். தீயசக்தி பற்றி வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிட்டோம். அதை பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு ஓட்டை பாத்திரத்திற்குள் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் ஊற்றின தண்ணீர் எங்கு சென்றுதான் தெரியவில்லை. கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்!வாயைத் திறங்கள் சிஎம் என்கிறார்கள். பேசினால் எழுந்து ஓடிவிடுகிறார்கள். இனிமேல் பேசுவதற்கு முன்பு சட்டமன்றத்தில் எல்லாக் கதவுகளையும் மூட சொல்ல வேண்டும். 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள். மேகதாது அணை குறித்து விஜய்க்கு என்னத் தெரியும் என்றெல்லாம் கேட்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எப்போது ரிஜெக்ட் பண்ணியது. அப்போது யார் ஆட்சியில் இருந்தது. ஸ்டாலின் சார் வேண்டுமென்றே விட்டுவிட்டாரா? எப்போதும் பேசி பேசி யார் மீதாவது பழி போட்டு மக்களை நடுத்தெருவில் விட்டுவிடுவதா? எனவே, வேலைதான் முக்கியம். மத்திய அரசு மீண்டும் தொகுதி மறுவரையறையக் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். யார் நம் உரிமையைப் பறித்தாலும் அதை ஏற்க முடியாது. பறிக்கவும் விடமாட்டோம். தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் கூட்டு கலவாணிகள். இதை இல்லை என்று அவர்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி முடியுமென்றால் அதை இந்த இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள்.முதல்வர் விஜய் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்என் மனதைவிட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்த கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். தமிழ்நாடு மக்களே உங்கள் அரசு உங்களுக்காக உழைக்கும். அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த தீய சக்தி நம்மைப் பார்த்து வாஷிங் மிஷன், சோபா மாடல் என விமர்சிக்கிறார்கள். தேர்தலிலேயே மக்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம். அந்தக் கலாச்சாரத்தை அடித்து உடைத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு குதிரை, கழுதை பேரமெல்லாம்... மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டுஒருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். உடனே ஸ்டாலின் சார் என நினைக்காதீர்கள். எனக்கு ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு. வேறு ஒருத்தர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாரே.. அவரை சொன்னேன். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என உறுதியாக சொல்லுங்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கொள்கையோடு இருந்த கட்சிகளெல்லாம் இப்போது எப்படி இருக்கிறது என உங்களுக்கே தெரியும்.கரூர் கூட்டம் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை.!தவெக தலைவரை எதிர்ப்பதில் ஒரு அரசியல் நியாயம் இருக்கிறது. ஆனால் மக்கள் தீர்ப்பளித்த முதல்வரை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இன்னும் ஆட்சியில் இருப்பது போல விஜய் அங்கு சொல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்று கட்டுபடுத்துகிறீர்கள். கரூர் போகக்கூடாது என கனவிலேயே இருக்கக் கூடாது. ரியாலிட்டு வாருங்கள். உங்கள் ஆட்சி முடிந்து தவெக ஆட்சி வந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் ஒழுங்காக படி படி என மண்டையிலேயே அடித்தும் திமுக இன்னும் முழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது. நியாயமான அரசியல் செய்யத் தெரியாதே அவர்களுக்கு. எனவே வரும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நன்றாக வெளுத்து விடுங்கள்" என்று பேசியிருக்கிறார்.