வார ராசிபலன்
இந்த வார ராசிபலன் ஜூலை 13 முதல் 19 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.மேஷம்: மேஷராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். சிலருக்

இந்த வார ராசிபலன் ஜூலை 13 முதல் 19 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.மேஷம்: மேஷராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம்.அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னை கள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.அதிர்ஷ்ட நாள்கள்: 14,15அதிர்ஷ்ட எண்கள்: 1, 7சந்திராஷ்டமம்: 16 இரவு முதல் 17,18,19 விடியற்காலை வரைவழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகைபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்குமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளேமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதேரிஷபம்: ரிஷபராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. சிலருக்கு எதிர் பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் கிடைப்பது மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.அதிர்ஷ்ட நாள்கள்: 13,16அதிர்ஷ்ட எண்கள்: 7, 9சந்திராஷ்டமம்: 19 விடியற்காலை முதல்வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.மிதுனம்: மிதுனராசி அன்பர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நாள்கள்: 15,18அதிர்ஷ்ட எண்கள்: 2, 4வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்..கடகம்:கடகராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கு வதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15,17அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7வழிபடவேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை, என்னுள்புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை,தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த,அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே சிம்மம்: சிம்மராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.அதிர்ஷ்ட நாள்கள்: 14,18அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4 வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே!கன்னி: கன்னிராசி அன்பர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுபச் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு கடன் வாங்க நேரிடும்.வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 14,18அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணுபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னையாளுடையான் குறியமாணியுருவாய கூத்தன்மன்னியமருமிடம் நறியமலர்மேல்சுரும்பார்க்க எழிலார்மஞ்ஞைநடமாட பொறிகொள்சிறைவண்டு இசைபாடும் புள்ளம்பூதங்குடிதானே துலாம்: துலாராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவு களாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப் பொறுப்புகளை நிறை வேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்கமுடியாது.வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மகிழ்ச்சி அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15,18அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5வழிபடவேண்டிய தெய்வம்: சண்முகக் கடவுள்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.நாளென் செயும் வினை தானென் செயும் எனை நாடி வந்தகோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசரிருதாளும் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமும்தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.விருச்சிகம்: விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் குறை வாகவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும்.அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15,19அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகைபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!தனுசு:தனுசுராசி அன்பர்களே! பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். வழக்குகளில் நிதானமான அணுகுமுறை அவசியம். தந்தையுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பளஉயர்வு, பதவிஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நாள்கள்: 15,18அதிர்ஷ்ட எண்கள்: 4, 6வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராமர்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!மகரம்: மகரராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியி டங்களில் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவால் நீண்டநாள் களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.அதிர்ஷ்ட நாள்: 13,16அதிர்ஷ்ட எண்கள்: 2,7வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்சகட சக்கரத் தாமரை நாயகன்அகட சக்கர விண்மணி யாவுறைவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.கும்பம்:கும்பராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர் களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். சிலருக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அதிர்ஷ்ட நாள்கள்: 16,19அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9சந்திராஷ்டமம்: 13 முதல் 14 காலை வரைவழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்சீலம் தான் பெரிது(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றகால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .மீனம்: மீனராசி அன்பர்களே! பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நாள்கள்: 13,19அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 சந்திராஷ்டமம்: ஜூலை 14 காலை முதல் 15,16 இரவு வரை.வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவிஅந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டுவந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்டநந்தலில் லாததூதன் நம்மையும் அளித்துக் காப்பான்