தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும் மாலை 5 மணியளவில் வெளியில் சென்று இரவாகியும் அவர்கள் வீடு திரு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும் மாலை 5 மணியளவில் வெளியில் சென்று இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்தப் புகாரினைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்கப்பட்ட உடல்கள், காணாமல் போன ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.உயிரிழந்த சிறுவர்கள்மேலும் சிறுவர்களின் பெரியப்பா, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இருவருக்கும் கூழ் வாங்கித் தந்ததாகவும், அப்போது அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (19) என்ற இளைஞர் சிறுவர்களை அழைத்துச் சென்றதாகவும், கூறிய தகவலை அடுத்து கேசவ் பாலாஜியை அழைத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவர்களை அழைத்துச் சென்ற கேசவ் பாலாஜி, கிணற்றுக்குள் புறா இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி, இருவரையும் 150 அடி ஆழக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.Murderதேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள கேசவ் பாலாஜியிடம் கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இரண்டு சிறுவர்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.துணை ராணுவப் படைகொண்டு அகற்றப்படவிருக்கும் தேனி மலைக்கிராம மக்கள்; அதிகார பயங்கரவாதத்தின் கோர முகம்!