தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' - உறவினர்கள் போராட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளத

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும், அதனை அகற்றுவதற்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அங்குச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது அங்கு கோமா நிலையில் உள்ள சிறுவனை, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து கோமா நிலையில் உள்ள சிறுவனைப் பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.அரசு தலைமை மருத்துவமனை பெரியகுளம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, ”நிவாஸ் என்ற மாணவனுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி அரசு மருத்துவமனையில் அச்சிறுவனை சந்தித்தேன். பின்னர் மருத்துவர்கள் விவரங்களை தெரிவித்தனர்.அதேபோல் சுகாகாரத்த்துறை அமைச்சருக்கு இந்தச் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் தெரிந்த நிலையில், அவர் சென்னையில் இருந்து துணை இயக்குநரை அனுப்பி சிறுவனுக்கான சிகிச்சை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மாணவன் நிவாஸை ஆய்வு செய்துவிட்டு அவரது சிகிச்சை விவரங்களை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளனர்.கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராநாளை நானும் சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளேன். மருத்துவர் தவறு செய்திருந்தால் அவருக்கான தண்டனையை தமிழ்நாடு அரசு நிச்சயம் பெற்றுக் கொடுக்கும். மாணவன் 54 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில், முன்னேற்றம் இல்லை. சிறுவன் கடினமான தருணத்தில் உள்ளார். அவரது மருத்துவ அறிக்கை வந்தவுடன், தவறு செய்த மருத்துவருக்கு தவெக அரசு தண்டனை பெற்றுக் கொடுக்கும், அதற்கான நிவாரணத்தையும் உறுதியாகப் பெற்றுக் கொடுப்போம்” எனக் கூறினார்.